ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபலமான நடிகைகளைப்பற்றி வெளியாகும் கிசுகிசுக்கள் சில சமயங்களில் அவர்களின் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பது போல் தெரிந்தாலும், பல சம யங்களில் அவர்களது மார்க்கெட்டுக்கு வேட்டு வைத்து விடும். அப்படி பல நடி கைகள் மார்க்கெட்டில் காணாமல் போயிருக்கிறார்கள். நயன்தாரா போன்ற ஓரிரு நடிகைகள் மட்டுமே காதல் கிசுகிசுக்களில் இருந்து தப்பித்துள்ளனர். இந்த நிலையில், பையா படத்தில் நடித்தபோது கார்த்தியுடன் இணைந்து கிசுகிசுக்கப் பட்ட தமன்னாவின் மார்க்கெட் அதன்பிறகு சரியத் தொடங்கியது. அதனால் தாய்மொழியான இந்தி சினிமாவிற்குள் பிரவேசித்தார் அவர்.
ஆனால் அங்கு எதிர்பார்த்தபடி நடித்த படங்கள் ஓடாததால் மறுபடியும் அஜீத்தின் வீரம் படம் மூலம் தமிழுக்கு வந்து, விட்ட மார்க்கெட்டை பிடித்தார் தமன்னா. அதோடு பாகுபலி, தேவி படங்களுக்குப்பிறகு பிசியாகி விட்டார். என்றபோதும் பிரபுதேவாவுடன் அவர் நடித்த தேவி படம், தெலுங்கு, இந்தியிலும் வெளியான நிலையில், பாலிவுட்டில் அவர்களைப்பற்றி கிசுகிசுக்கள் பரவத் தொடங்கியது. அதோடு, மீண்டும் பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க இன்னொரு படவாய்ப்பும் தமன்னாவுக்கு வந்துள்ளது. ஆனால், தொடர்ந்து அவருடன் நடிப்பது எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாகி விடும் என்று அந்த கிசுகிசுவில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் அந்த படத்தை தவிர்த்து விட்டாராம் தமன்னா. மேலும், சினிமாவில் நீடிக்க விரும்பும் அவர், இனிமேல் தன்னைப்பற்றி எந்தவொரு கிசுகிசுக்களும் வெளியாகாமல் இருக்கும் உசார் நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கிறார்.