ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி எனும் சரித்திர படத்தில் நடித்து புகழ்பெற்ற நாயகன் பிரபாஸ் அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வருகின்றார். பாகுபலி படத்திற்கே நான்கு ஐந்து வருடங்களை செலவிட்ட பிரபாஸ் மீண்டும் கமர்ஷியல் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், பிரபாஸின் அடுத்த படங்களுக்கான வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ரன் ராஜா ரன் படப்புகழ் இயக்குனர் சுஜீத் பிரபாஸின் அடுத்த படத்தை இயக்குகின்றார். பக்கா கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தின் பெரும்பாலுமான படப்பிடிப்பு துபாய் போன்ற அரபு நாடுகளில் படமாக்கப்படவுள்ளதாம். பெரும் பொருட் செலவில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைக்க பாலிவுட் இசையமைப்பாளர்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2017 ஜனவரியில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ள இயக்குனர் இப்படத்தை தெலுங்கு தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் வெளியிட முடிவு செய்துள்ளார். இதனால் பாலிவுட் இசையமைப்பாளர்களான எஷான், லோய் மற்றும் சங்கர் மகாதேவனிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார் சுஜீத். சரித்திர படத்திற்கு பின்னர் பிரபாஸ் நடிக்கும் திரைப்படம் இது என்பதால் சுஜீத்-பிரபாஸ் இணையும் புதிய படத்தின் விபரங்கள் அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.