டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள சினிமாவின் இளம் முன்னணி நாயகன் துல்கர் சல்மான்.. பிரபல நடிகர் மெகாஸ்டார் மம்முட்டியின் மகன் என்பதெல்லாம் நமக்கு தெரியும். ஆனால் மகனை சினிமாவில் நடிக்க அனுப்புவதற்கு முன் அவருக்கு ஒரு கால்கட்டு போட தீர்மானித்து அமல்சுபியா என்கிற பெண்ணை கடந்த டிச-22, 2011 அன்று துல்கருக்கு திருமணம் செய்து வைத்தார் மம்முட்டி. அதன்பிறகுதான் துல்கர் சினிமாவில் நுழைந்ததும் இத்தனை உயரத்தை அடைந்ததும் நடந்தது.. அதனால் தனது மனைவி மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார் துல்கர் சல்மான்.
இன்று இவர்களது ஐந்தாவது திருமண நாள்.. ஆனால் இதனை ஒன்றாக இருந்து சந்தோசமாக கொண்டாட முடியாதபடி அமெரிக்காவில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் துல்கர் சல்மான். இருந்தாலும் தனது மனைவிக்கு பேஸ்புக் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ள துல்கர், குறும்புடன், “என்னைப்போன்ற ஒரு கார்ட்டூனை எப்படி திருமணம் செய்துகொண்டாய் என்றுதான் எனக்கு தெரியவில்லை.. ஆனால் நன்றி பேபி.. இன்று நம் திருமண நாள்.. இந்த ஐந்து வருடங்களும் ஐந்து நிமிடங்களாக ஓடிவிட்டது.. இந்த வருடம் என்னால் வீட்டில் இருக்கமுடியாமல் போனது வருத்தம் தான். ஆனால் நான் வீட்டிற்கு வந்ததும் இதை சிறப்பாக கொண்டாடுவோம்” என ஒரு கடிதம் போல மனைவிக்கு எழுதியுள்ளார்.
இந்தப்பதிவை இப்போதுவரை ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் வரை லைக் பண்ணியுள்ளார்கள்.