ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தமன்னா. தற்போது இவர் சுராஜ் இயக்கத்தில், விஷால் உடன் நடித்துள்ள கத்திசண்டை படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கடந்தாண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி படத்தில் முக்கிய ரோலில் நடித்த தமன்னா, பாகுபலி -2 படத்திலும் நடிக்கிறார். தமன்னாவுடன் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இப்படத்திலும் தொடருகிறார்கள். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமன்னா, தான் பாகுபலி-2 படத்தை முடித்துவிட்டதாக கூறினார்.
இதைப்பற்றி தமன்னா கூறியதாவது.... "பாகுபலி படத்தின் முதல் பாகத்தைவிட பாகுபலி-2 இன்னும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. பாகுபலி-2 படத்தில் நான் நடித்து முடித்துவிட்டேன். ரசிகர்கள் அனைவருக்கும் இப்படம் ஒரு விருந்தாக இருக்கும். நிச்சயம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் படமாக இருக்காது" என்றார்.