கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் 2.ஓ. ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்புகள் இப்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ரஜினி, எமி ஜாக்சன் தொடர்பான ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ அருகில் உள்ள கோம்தி நதி, ஜானேஸ்வர் மிஸ்ரா பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. இதற்காக ஷங்கர் தன் உதவியாளர்களுடன் சென்று லொக்கேஷன் பார்த்து திரும்பி உள்ளார்.
இதுகுறித்து உத்தர பிரதேச மாநில திரைப்பட மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் கவுரவ் திரிவேதி கூறியிருப்பதாவது: இந்தியாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எங்கள் மாநிலத்தில் வந்து நடிப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. தென்னிந்திய சினிமாக்களை ஈர்க்க வேண்டும் என்கிற எங்கள் முதல்வரின் கொள்கைக்கு இது வலு சேர்ப்பதாக இருக்கிறது. படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். படப்பிடிப்புக்கு தேவையான அத்தனை உதவிகளையும் முன்னின்று செய்து கொடுப்போம். என்கிறார் திரிவேதி.