ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரு சில நடிகர்கள் மட்டுமே தான் நடிக்கும் படங்கள் வியாபார ரீதியில் வசூல் பெற வேண்டும் என்ற எண்ணம் நீங்கி, இந்தியாவுக்காக தன் தாய்நாட்டின் புகழை நிலைநிறுத்த தன் திரைபடங்கள் மூலம் போராடி வருகின்றனர். அப்படி போராடும் சில நடிகர்களில் அமீர்கானும் முக்கியமானவர். விளையாட்டுக்கு முக்கியதுவம் கொடுத்து அவர் நடித்த லகான் போன்ற படங்கள் இந்திய அளவில் பேசப்பட்டதோடு ஆஸ்கர் வரை போனது.
இந்த முறை அமீர்கான் கையில் எடுத்திருப்பது மல்யுத்தம் விளையாட்டை. அமீர்கான் தற்போது தங்கல் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அமீர்கான் மல்யுத்தத்தை பற்றி பேசியிருக்கிறார். மல்யுத்தத்தில் அதிக ஆர்வம் கொண்டவரான மாவீர் சிங் எனும் அமீர்கான், தன்னால் சாதிக்க முடியாததை தனக்கு பிறக்க போகும் ஆண் வாரிசின் மூலம் சாதிக்க துடிக்கிறார். ஆனால் அவருக்கு பிறந்த குழந்தைகள் அனைத்துமே பெண் பிள்ளைகள் தான். ஒருநாள் பிள்ளைகளான கீதா, பபிதாவின் ஆற்றல் கண்டு அவர்களை மல்யுத்த வீராங்கனையாக மாற்ற துடிக்கிறார். அதற்காக அவர்களை கட்டாயப்படுத்தி மல்யுத்த பயிற்சி அளிக்கிறார். எப்படி தன் மகள்களை மல்யுத்தத்தில் தயார்படுத்தி, அவர்களுக்கு உரிய பயற்சி அளித்து சாதிக்க வைக்க போராடுகிறார், அதற்காக அவர்படும் சிரமங்கள், அவமானங்கள், ஏளன பேச்சுகள் உள்ளிட்ட பல விஷயங்களை படத்தில் சொல்லியிருக்கிறார். ஆணுக்கு பெண் சமம் என்று சொல்லும் இந்த உலகத்தில் பெண்களாலும் எதிலும் சாதிக்க முடியும் என்று உரக்க தங்கல் படத்தின் வாயிலாக சொல்ல வருகிறார் அமீர்.
தங்கல் படம் நாளை(டிச.,23-ம் தேதி) உலகம் முழுக்க சுமார் 5000-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. உங்களுக்கு பெண் குழந்தையா என்று கேட்பவர்கள் அவசியம் இந்த படத்தை பார்க்க வேண்டும். இந்த மாதிரி படங்கள் வெற்றி பெற்றால், இதை போல பல கதைகள் தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன் வருவார்கள் என்பது மட்டும் நிதர்மான உண்மை.