மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் வாய்ப்பு தேடிய போது அவரைப் போன்ற தோற்றம் கொண்ட நளினிகாந்தும் வாய்ப்பு தேடினார். ரஜினிகாந்த் பெயர் சிவாஜிராவ், நளினிகாந்த் பெயர் ஜெயராம் ராஜு. ரஜினி கெய்ட்வாட் சமூகம், ஜெயராம் ராஜு ராஜபாளையம் ராஜுக்குள் சமூகம்.
ரஜனி கண்டக்டராக இருந்தார், நளினிகாந்த் மருந்து விற்பனை பிரதிநிதியாக இருந்தார். இருவரும் ஒரு வருட வித்தியாசத்தில் பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படித்தார்கள். பாலச்சந்தர் அலுவலகத்தில் ரஜினி வாய்ப்பு கேட்டு திரும்பியதும் இவர் போவார். "என்னப்பா இப்பதானே வந்துட்டு போனே?" என்று பாலச்சந்தர் கேட்பார். "சார் அது சிவாஜிராவ். நான் ஜெயராம் ராஜு" என்பார் நளினிகாந்த்.
இருவருக்குமே வாய்ப்பு கிடைப்பது கஷ்டமாக இருந்தது. இதனால் வெறுத்துப்போன நளினிகாந்த் பெங்களூருக்கு சென்று மருந்து பிரதிநிதி வேலையை பார்த்தார். ரஜினிகாந்த் விடா முயற்சியால் நடிகர் ஆனார்.
பெங்களூரில் இருந்து திரும்பி வந்த நளினிகாந்த், ரஜினி போன்றே நடிக்க ஆரம்பித்தார். ரஜினி கால்ஷீட் கிடைக்காமல் இருந்தவர்கள் நளினி காந்தை வைத்து படம் எடுத்தார்கள். ஆனாலும் நளினிகாந்தால் ஜெயிக்க முடியவில்லை, தமிழ், தெலுங்கில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தவர் கே.பாக்யராஜின் ராசுக்குட்டி படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பிறகு தொலைக்காட்சி தொடர்களை தயாரித்தார். யாமிருக்க பயமே படத்தின் மூலம் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.