ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
‛‛இனி அச்சம் அச்சம் இல்லை....", "அன்பென்ற மழையிலே...", "கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு..." உள்ளிட்ட பல பாடல்களுக்கு அனுராதா ஸ்ரீராமின் குரல் உயிர் மூச்சாக இருந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் தற்போது மனசு மற்றும் விருப்பம் என இரண்டு பாடல்களை எழுதி, இசையமைத்துள்ளார்.
"எல்லோருடைய வாழ்க்கையிலும் பல தருணங்கள் இருக்கும். ஆனால் ஒரு சில தருணங்களில், நம்மை அறியாமலேயே நம்முடைய மனம் வழுக்கி விழுந்து விடும். இந்த கருத்தை மையமாக கொண்டு நான் உருவாக்கிய பாடல் தான் மனசு எதை பார்த்து வழுக்கி விழுந்துச்சு... நான் எழுதி இசையமைத்த இந்த பாடலில் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார் பிரவீன். விருப்பம் - என்னுடைய இரண்டாவது பாடல், சிலருக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்ற ஆசை, சிலருக்கு கையேந்தி பவனில் சாப்பிட வேண்டும் என்ற ஆசை, சிலருக்கு நடந்து செல்ல வேண்டும் என்ற ஆசை, சிலருக்கு காரில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை, இப்படி எல்லோருக்கும் ஒருவித ஆசைகளும், விருப்பங்களும் இருக்கும். இது போன்ற விருப்பங்களை ஒன்றாக சேர்த்து உருவானது தான் விருப்பம் பாடல். தற்போது என்னுடைய இந்த இரண்டு பாடல்களும் இசை பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது மகிழ்ச்சியாக இருக்கின்றது'' என்று கூறியுள்ளார்.
இதனிடையே மகாகவி பாரதியாரின் பாடல்களுக்கு புத்துயிர் அளித்து, விரைவில் அதனை புது பொலிவுடன் அனுராதா ஸ்ரீராம் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.