ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு |
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எஸ்-3. ஏற்கனவே வெளியான சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்களின் மூன்றாம் பாகமான இந்த படத்திலும் துரைசிங்கம் கேரக்டரையே தொடர்கிறார் சூர்யா. அதோடு உலக அளவிலான சமூக விரோதிகளை களை எடுக்கிறார். அதனால் பல வெளிநாடுகளுக்கு சென்று பிரமாண்டமாக படப்பிடிப்பு நடத்தியுள்ளார் ஹரி. மேலும், இந்த படத்திலும் அனுஷ்காவே சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்க, இன்னொரு முக்கியமான வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.
இப்படத்தை டிசம்பர் ரிலீஸ் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தனர். அதேபோல் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், அப்படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் கொடுத்து விட்டதால் ரிவைசிங் கமிட்டிக்கு சென்றுள்ளார்கள். இதனால் பொங்கலுக்கு எஸ்-3 வெளியாக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது விசாரித்தால், ஜனவரி 26ல் எஸ்-3 படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அந்த தேதியும் உறுதியில்லையாம். எஸ்-3 படத்தில் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததால் சூர்யா ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.