பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியன். தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர். சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்த அவர் கடையநல்லூர் காஜாவிடம் உதவியாளராக இருந்தார். கடும் போராட்டத்துக்கு பிறகு தப்புக்கணக்கு, மனசுக்கேத்த மகராசா படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார். அவைகள் தோல்வி அடைந்தது. அதன்பிறகு அதிகாலை சுபவேளை, பூஞ்சோலை குருவிகளே என்ற படத்தை இயக்கினார். இரண்டுமே பாதியில் டிராப் ஆகிவிட்டது.
அதன்பிறகு ராசியில்லாத இயக்குனர் ஆனார் அகத்தியன். அதன் பிறகு பொண்டாட்டி ராஜ்யம் என்ற படத்துக்கு கதை, திரைக்கதை வசனம் எழுதினார். இதனை அன்பாலயா பிரபாகரன் தயாரிக்க, கே.எஸ்.ரவிகுமார் இயக்கினார். அப்போது அன்பாலயா பிரபாகரன், அகத்தியனின் தொடர் தோல்விகள் பற்றி கேட்டறிந்தார். "இனி ஜெயிக்க வேண்டுமானால் பெயரை மாற்று" என்றார். அவர் ஆலோசனைப்படி பெயரை மாற்ற ஒப்புக் கொண்டார். இதனால் தனது இயற்பெயரான கருணாநிதி என்பதை மாற்றி அகத்தியன் ஆனார். அகத்தியன் என்ற பெயரை தேர்வு செய்தது அன்பாலாயா பிரபாகரன். பெயர் மாற்றத்திற்கு பிறகு பொண்டாட்டி ராஜ்யம் வெற்றி பெற்றது. அதன் பிறகு முதன் முதலான இயக்கிய மதுமதியும் வெற்றி பெற்றது. காதல் கோட்டையில் தேசிய விருதும் கிடைத்தது.