ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் குற்றமே தண்டனை படத்தில் நடித்த விதார்த், அதன்பிறகு மணிகண்டனின் அசோசியேட் சுரேஷ் சங்கைய்யா இயக்கத்தில் ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தில் நடித்துள்ளார். ஈராஸ் இன்டர்நேசனல் தயாரித்துள்ள இந்த படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா நடித்திருக்கிறார். கிராமத்து கதை சூழலில் உருவாகியுள்ள இந்த படம் தற்போது மெர்லின் திரைப்பட விழாவுக்கு சென்றுள்ளது.
இதுபற்றி இயக்குனர் சுரேஷ் சங்கைய்யா கூறும்போது, ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் ஒரு அழுத்தமான மெசேஜை பதிவு செய்திருக்கிறேன். மேலும், படத்தின் தலைப்பை கேட்டதும், கோயில்களில் கிடா வெட்டுவது குறித்த கதையாக இருக்குமோ என்று கேட்கிறார்கள். ஆனால் இது வேறு கதை. சிறுதெய்வ வழிபாட்டை நான் தவறாக சித்தரிக்கவில்லை. இந்த படம் அனைத்துதரப்பினருக்கும் பிடித்தமானதாகவே இருக்கும்.
அதோடு, படத்தில் சொல்லப்பட்டுள்ள விசயத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால்தான் மெர்லின் திரைப்பட விழாவுக்கு படத்தை அனுப்பி உள்ளோம். ஜனவரி முதல் வாரத்தில் ரிசல்ட் தெரியும். அதையடுத்து ஒரு கிடாயின் கருணை மனு படத்தை திரைக்கு கொண்டு வரும் அடுத்தகட்ட வேலைகள் நடைபெறும் என்கிறார் இயக்குனர் சுரேஷ் சங்கைய்யா.