பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமீபகாலமாக சினிமா தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவதே குறைந்து கொண்டிருக்கிறது. இதற்கு டிக்கெட் விலை, கேன்டீன் பொருட்களின் விலை ஏற்றம் என பல காரணங்கள் சொல்லப்படுகிறது. என்றாலும், அதிகபட்ச விலையை குறைத்து ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்கும் முயற்சிகள் பெரிதாக நடைபெறவில்லை. நடிகர் விஷால், இந்த விசயத்தில் ஓரளவு அக்கறை காட்டி வருகிறார். குறிப்பாக, தான் நடித்த படங்கள் மட்டுமின்றி, மற்ற நடிகர்களின் படமாக இருந்தாலும் கேபிள் டிவிக்கள், வெளியூர் பேருந்துகளில் வெளியாவது தெரிந்தால் உடனடியாக அதுகுறித்த நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.
இந்தநிலையில், சமீபத்தில் ஒருநாள் எதேச்சையாக அவர் ஒரு ஆட்டோவில் பயணித்தபோது, அந்த ஆட்டோ ஓட்டுனரிடம், படம் பார்க்க தியேட்டர்களுக்கு செல்வதுண்டா? கடந்த சில தினங்களுக்கு முன்பு என்ன படம் பார்த்தீர்கள்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நபர், மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ஆட்டோவை அனுமதிப்பதே இல்லை. அதனால் என்னை மாதிரி ஆளுங்க தியேட்டர்களுக்கு செல்வதே இல்லை என்றொரு அதிர்ச்சி செய்தியை விஷாலிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, தான் நடித்து வருகிற 23-ந்தேதி வெளியாக உள்ள கத்திச்சண்டை படம் ஓடும் அனைத்து மல்டி பிளக்ஸ் தியேட்டர்களிலும் ஆட்டோக்களை பார்க்கிங் பண்ண அனுமதிக்க வேண்டும் என்று தனது சார்பில் கோரிக்கை வைத்துள்ளாராம் விஷால்.