தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் உதயநிதி ஸ்டாலினும் ஒரு முக்கிய இடத்தை பிடித்து இருக்கிறார். தற்போது உதயநிதி நிறைய படங்களை தனது கைவசம் வைத்து இருக்கிறார். உதயநிதி தற்போது நடித்து வரும் 'பொதுவாக என் மனசு தங்கம்' படத்தின் படபிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து 'பொதுவாக என் மனசு தங்கம்' படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி, வைகை அணை உள்ளிட்ட பகுதிகளில் படமாகபட்டது வருகிறது. ஆனால் படத்தின் படப்பிடிப்பை நிருத்தி வைத்துள்ளனர்.
நேற்று ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வேலப்பர்கோவில் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. தகவல் அறிந்ததும் இந்து சமய அறநிலையத்துறையினர் படப்பிடிப்பு குழுவினரிடம் சென்று இங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கான அரசு வழங்கிய அனுமதியை கேட்டனர்.
ஆனால் படப்பிடிப்பு குழுவினர் அனுமதி வாங்காமல் படப்பிடிப்பு நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அனுமதி பெற்று படப்பிடிப்பினை நடத்துமாறு அறநிலையத்துறையினர் அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் தடை செய்யப்பட்ட வனப்பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த குழுவினர் ஆயத்தமாகி இருந்தனர். வனத்துறையினரும் அனுமதி பெற்றே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என கூறினர். இதனால் படப்பிடிப்புக்கு தயாராகி வந்த உதயநிதி ஸ்டாலின், கதாநாயகி நிவேதா மற்றும் குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.