ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மற்றவர்களின் படங்களில் இருந்து தனது படங்கள் தனித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக மெனக்கெடக்கூடியவர் மிஷ்கின். குறிப்பாக, பிரசன்னா, பாண்டியராஜன் ஆகிய நடிகர்களைகூட தனது அஞ்சாதே படத்தில் வில்லனாக்கினார். அப்படிப்பட்ட மிஷ்கின் தற்போது விஷாலை நாயகனாக வைத்து தான் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் இயக்குனர் கே.பாக்யராஜை நடிக்க வைக்கிறார்.
ஆனால், இதுவரை அந்த படத்தில் பாக்யராஜ் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிப்பதாகத்தான் கூறப்பட்டது. ஆனால் இப்போது விசாரித்தால், கே.பாக்யராஜை வில்லத்தனமான ஒரு கேரக்டரில் மிஷ்கின் நடிக்க வைப்பதாக கூறப்படுகிறது. தான் நடிகரான ஆரம்ப காலத்தில் ஓரிரு படங்களில் மட்டுமே நெகட்டீவ் ரோலில் நடித்துள்ள பாக்யராஜ், அதன்பிறகு ஹீரோ வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார். சமீபகாலமாக குணசித்ர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அவரை, யாருமே எதிர்பார்க்காத வகையில், வில்லனாக்கியிருக்கும் மிஷ்கின், இந்த வேடத்துக்காக அவரது கெட்டப்பையும் மாற்றுகிறாராம்.
ஆக, அஞ்சாதே படத்தில் சிஷ்யர் பாண்டியராஜனை வில்லனாக்கிய மிஷ்கின், இப்போது குருநாதர் பாக்யராஜ்க்கும் வில்லன் அரிதாரம் பூசுகிறார்.