வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் படம் பார்த்து தாயம் என்ற படத்தை இயக்கி இருக்கிறார் என்ஜினீயர் கண்ணன் ரங்கஸ்வாமி. ஒரே அறைக்குள் நடக்கும் ஹாலிவுட் பாணியிலான படம். பியூச்சர் பிலிம் பேக்டரி சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்துள்ளார். பாக்யராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சதீஷ் செல்வம் இசை அமைத்துள்ளார். படத்தைப் பற்றி இயக்குனர் கண்ணன் ரங்கஸ்வாமி கூறியதாவது:
ஒரே அறைக்குள் படம் எடுப்பது ஹாலிவுட்டில் அதிகம். அடிக்கடி அது மாதிரி படங்கள் வெளிவரும். ஆனால் தமிழில் இது புதிய முயற்சி. ஒரு பெரிய நிறுவனம் தனது நிறுவனத்துக்கு தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்ய இண்டர்வியூ நடத்துகிறது. அந்த இண்டர்வியூவே ஒரு அறையில் ஒரு நாள் தங்க வேண்டும் என்பதுதான். அந்த அறைக்குள் ஒரு பேய் இருக்கிறது. அந்த பேயை அவர்கள் சமாளிக்க வேண்டும். சமாளித்து உயிருடன் திரும்பி வந்தால் வேலை.
இந்த சவாலை இரண்டு பெண்கள் உள்பட 8 பேர் ஏற்கிறார்கள். ஒவ்வொருவராக அந்த அறைக்குள் செல்கிறார்கள். யாருக்கு என்ன நடக்கிறது. யார் யார் உயிர் பிழைத்தார்கள் என்பதுதான் கதை. 15 நாளில் படத்தை எடுத்து முடித்து விட்டோம். ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். என்றார் கண்ணன் ரங்கஸ்வாமி.