600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தமிழ் சினிமாவுக்கு வந்தால் கட்டாயம் முன்னணி நடிகையாகி விடலாம் என்ற நம்பிக்கையுடன்தான் கேரளாவில் இருந்து இளவட்ட நடிகைகள் கோலிவுட்டுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அப்படி வந்த அசின், நயன்தாரா, மீராஜாஸ்மின், லட்சுமிமேனன் உள்ளிட்ட சில நடிகைகள் பெரிய அளவில் புகழ் பெற்றனர். இவர்களில் நயன்தாரா 30 வயதை கடந்த பிறகும் மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்து கொண்டிருக்கிறார்.
இவர்களைப்போல்தான் மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தில் அறிமுகமான பிரயாகாவும் பெரிய நம்பிக்கையுடன் கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்தார். பெரிய டைரக்டர் படம் என்பதால் தனக்கு பெரிய ரீச் கிடைக்கப் போகிறது என்று அந்த படத்தில் உயரமான கட்டிடத்தில் ரோப்பில் தொங்கியபடியெல்லாம் பேய் கெட்டப்பில் நடித்தார். ஆனால் அந்த படத்தில் அவரது நிஜ கெட்டப்பில் ஒரேயொரு காட்சியில் மட்டுமே நடித்திருந்தார். அந்த காட்சியிலேயே அவர் இறந்தும் விடுவார். அதனால் அந்த படத்தில் பிரயாகாவின் நடிப்பும், அவரது முகமும் தமிழ் ரசிகர்களை கவரவில்லை.
அதேபோல், அதற்கடுத்தும் ஒரு படத்தில் அவர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அந்த படம் கைவிடப்பட்டது. ஆனால் சமீபத்தில் மீண்டும் பிரயாகாவை ஒரு தமிழ்ப்படத்தில் பேயாக நடிக்க அழைத்தனர். ஆனால், பேயாக வந்து பழிவாங்க வேண்டும் என்றதுமே, மேக்கப்போட்டு என் முகத்தையே மறைத்து விடுவீர்கள். அப்படியென்றால் இதுவும் இன்னொரு பிசாசு படமாகி விடும் என்று சொல்லி அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்ட பிரயாகா, மலையாளத்தில் சில படங்களில் நடித்தபோதும், திருப்தியான வேடங்களில் நடிக்கிறேன். இப்போதைக்கு அதுவே போதும் என்று நினைக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.