சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
சமீபத்தில் நடைபெற்ற மலையாள நடிகர் திலீப் - காவ்யாமாதவன் திருமண நிகழ்வுக்கு மெகாஸ்டார் மம்முட்டி நேரில் வந்து வாழ்த்தினார். ஆனால் கிட்டத்தட்ட திலீப்பின் அண்ணன் என்று சொல்லப்படுகின்ற அளவுக்கு திலீப்பிடம் பாசம் காட்டுகின்ற மோகன்லால் திருமண விழாவுக்கு வரவில்லை. அப்போது அவர் மேஜர் ரவி டைரக்சனில் நடித்துவரும் '1971' படத்தின் படப்பிடிப்பிற்காக ராஜஸ்தானில் தங்கி இருந்ததால் வரமுடியவில்லை என்று சொல்லப்பட்டது.. ஆனால் இதுநாள் வரை திலீப்பிற்கோ காவ்யா மாதவனுக்கோ தனது வாழ்த்தை மோகன்லால் தெரிவிக்கவே இல்லை.. மோகன்லால் வராதது மட்டுமல்ல, அவரது நண்பர்கள் குழு என அறியப்படுகின்ற இயக்குனர் பிரியதர்ஷன், நடிகர்சங்க தலைவர் இன்னொசன்ட், நடிகர்கள் நெடுமுடி வேணு, கணேஷ்குமார், இடவேள பாலு உள்ளிட்ட பலரும் உள்ளூரில் இருந்துகொண்டே கல்யாணத்திற்கு வராமல் தவிர்த்தது மலையாள திரையுலகில் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது...
குறிப்பாக மோகன்லாலுக்கும் திலீப்புக்கும் கடந்த சில வருடங்களாகவே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது என்று, இருவருக்கும் இடையே அறிவிக்கப்படாத ஓர் பனிப்போர் நடக்கிறது என்றும் அதனால் தான் திலீப்பின் திருமணத்திற்கு வாழ்த்துச்சொல்லக்கூட மோகன்லால் முன்வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. பனிப்போருக்கு என்ன காரணம்..? திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறார் என்கிறபோதுதான் திலீப்புக்கும் மஞ்சுவுக்கும் இடையே மனக்கசப்பு ஆரம்பித்தது.. அந்த நேரத்தில்தான் ரஞ்சித் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தில் மஞ்சு வாரியர் நடிக்கிறார் என பேச்சு அடிபட்டது..
மஞ்சு வாரியருக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டாம் என அப்போது மோகன்லாலிடம் திலீப் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு மோகன்லால் ஹீரோயின் தேர்வு என்பது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் முடிவு என்பதால் தான் அதில் தலையிட முடியாது என்றும் கூறி ஒதுங்கிவிட்டாராம்.. அந்தப்படத்தில் மஞ்சு வாரியர் நடிக்கவில்லை என்றாலும், அதன்பின் கடந்த வருடம் வெளியான 'என்னும் எப்பொழும்' படத்தில் மோகன்லாலுடன் நடித்தார்.. இந்தக்காரணங்களால் மோகன்லாலிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக திலீப் தூர விலகிப்போனார் என்றும் அதன் எதிரொலிதான் இப்போது நடைபெற்ற திலீப்பின் திருமணத்தில் மோகன்லால் கலந்துகொள்ளாதது என்றும் சொல்லப்படுகிறது.