தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை ரோகினி இயக்கிய முதல் படம் அப்பாவின் மீசை. இதில் பசுபதி, நித்யா மேனன், சலீம்குமார் உள்பட பலர் நடித்துள்ளனனர். அல்போன்ஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்துள்ளார்.
இதன் படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வரும் வேளையில் தயாரிப்பாளர் சேரனுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மேற்கொண்டு படத்தின் பணிகளை ரோகினியால் தொடர முடியவில்லை. சுமார் 3 வருடங்கள் படம் கிடப்பில் கிடக்கிறது. படத்தை வெளியில் கொண்டு வர குறைந்தபட்சம் 40 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறதாம். இதனை க்ரவுட் பண்டிங் முறையில் திரட்ட ரோகினி முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
கன்னடத்தில் லூசியா, யூ டேர்ன் ஆகிய படங்கள் க்ரவுண்ட் பண்டிங் முறையில் நிதி திரட்டி தயாரிக்கபப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. தமிழில் பார்த்திபன் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தையும் க்ரவுட் பண்டிங் முறையில் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோகினியின் அப்பாவின் மீசை படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையிலானது. அப்பாவுக்கும் மகனுக்குமான உறவை சொல்கிற படம்.