டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஷங்கர் - ரஜினி கூட்டணியில் எந்திரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ‛2.O' என்ற பெயரில் உருவாகி வருகிறது. ரஜினி, அக்ஷ்ய்குமார், எமிஜாக்சன் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். முதல்பாகத்தை விட பிரமாண்டமாக இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக ‛2.O' உருவாகி வருகிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாவதால் தற்போதைய சூழலில் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.400 கோடி என்று சொல்கிறார்கள்.
‛2.O' படத்தின் ஷூட்டிங் சென்னையை அடுத்த அம்பத்தூரில் பிரமாண்டமான செட் போட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சென்னையை வாரிப்போட்ட வர்தா புயலால் ‛2.O' படத்தின் ஷூட்டிங்கும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த செட்டின் ஒருபகுதி வர்தா புயலால் சிதைந்து போனதாக கூறப்படுகிறது. ஆனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, ஆனால் செட்டின் ஒருபகுதி சிதைந்ததால் தற்போது ‛2.O' படத்தின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக புயலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் படக்குழு ஷூட்டிங்கை ஞாயிறு அன்றே நிறுத்தி வைத்திருந்தது. தற்போது செட்டுகளை மீண்டும் புதுபிக்கும் பணி நடக்கிறது. அது முடிந்தது படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிகிறது.