பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
எல்லாம் சுமூகமாகத்தான் போய்க்கொண்டு இருந்தது நேற்று முன்தினம் வரை. ஆனால் நேற்று கேரள திரைப்பட தயாரிப்பாளர்களும், தியேட்டர் அதிபர்களும் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் புதுப்படங்கள் வெளியாக முடியாத அளவுக்கு திடீர் சிக்கல் உருவாகியுள்ளது.. அதில் முதல் பாதிப்பு அடையவிருக்கும் படம் என்றால் அது நாளை வெளியாக இருந்த துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' தான். ஆனால் இது திடீரென ஏற்பட்டுள்ள பிரச்சனை அல்ல என்றும், பல நாட்களாக தீர்வு காணப்படாமல் இருக்கும் இந்தப்பிரச்சனைக்கு இப்போது செக் வைத்துள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
மலையாள சினிமா வியாபாரத்தை பொறுத்தவரை தற்போது முதல் வார வசூலில் 6௦-40 என்கிற சதவீத கணக்குதான் நடைமுறையில் உள்ளது. அதாவது தயாரிப்பாளர்களுக்கு 60%, விநியோகஸ்தர்களுக்கு 40%, இரண்டாவது வாரம் 55-45, 3வது வாரம் 50-50 என படிப்படியாக மாறும். ஆனால் இனிமேல் முதல் வாரத்தில் இருந்தே 50-50 என சமபங்கு கொடுக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளார்கள் தியேட்டர் அதிபர்கள். ஆனால் நீண்ட நாட்களாக இருந்து வரும் இந்த கோரிக்கையை ஏற்பதில் தயாரிப்பாளர்களுக்கு உடன்பாடு இல்லை. தங்களது படங்கள் பாதிக்கும் என்றும் தெரிந்தும் கூட தயாரிப்பாளர்கள் தரப்பு பிடிவாதமாக இருக்கிறது. இதனால் இந்தவாரம் (திய-16) வெளியாக இருந்த துல்கர் சல்மான் படம், அடுத்தவாரம் (டிச-23) வெளியாக இருந்த மோகன்லால், பிருத்விராஜ் படங்கள் திட்டமிட்டபடி வெளியாவது சந்தேகமே என்று சொல்லப்படுகிறது.