தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
‛பீலே - பெர்த் ஆப் எ லெஜென்ட்' படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ் சினிமா, இந்திய சினிமாவையும் தாண்டி ஹாலிவுட்டிலும் முத்திரை பதித்தார். 2009-ம் ஆண்டு ‛ஸ்லம்டாக் மில்லினியர்' என்ற படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவிற்கு பெரும் புகழை தேடி தந்தார்.
தற்போது மீண்டும் அவர் இசையமைத்த படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரபல கால்பந்து வீரர் பீலேயின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‛பீலே - பெர்த் ஆப் எ லெஜென்ட்' என்ற படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்தப்படத்தில் சிறப்பாக இசையமைத்தமைக்காக ரஹ்மான் பெயர் ஆஸ்கர் விருது பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
அடுத்தாண்டு ஜன.,24-ம் தேதி ஆஸ்கர் பரிந்துரையின் இறுதிப்பட்டியல் தெரியவரும். தொடர்ந்து பிப்., 26-ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும், அன்றைய தினம் யார் விருது பெற போகிறார்கள் என்பது தெரியவரும்.
ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கர் விருது கிடைக்குமா...? பிப்., 26-ம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்...! கூடவே அவர் விருது பெற வாழ்த்துவோம்...!!