Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

15 அக், 2011 - 14:19 IST
எழுத்தின் அளவு:

நயன்தாரா மீது கொண்ட காதலால், முதல்மனைவி ரமலத்தையே விவாகரத்து செய்துவிட்டு வந்த பிரபுதேவா, விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில், இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, காதல் முறிந்துவிட்டதாகவும், இதனால் திருமணமே நின்று விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவுடனான காதல் முறிவுக்கு பின்னர் தனிமையில் இருந்த நயன்தாராவுக்கு, "வில்லு" படத்தில் நடித்தபோது டைரக்டர் பிரபுதேவாவுடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். ஆனால் இவர்களது காதலுக்கு பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார். இருந்தும் தங்களது கள்ளக்காதலில் உறுதியாக இருந்தனர் நயன்-பிரபுதேவா ஜோடி. தனது கணவரை நயன்தாராவிடமிருந்து மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியேறினார் ரமலத். இறுதியில் ரமலத்தையே சமாதனம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்த பிரபுதேவா, ரமலத்திற்கு பலகோடி மதிப்பிலான சொத்துக்களையும் எழுதி கொடுத்தார்.

இதனையடுத்து நயன்-பிரபுதேவா காத‌லுக்கான சிக்கல் தீர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, திருமண ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இதனிடையே தன்மீது கொண்ட காதலுக்காக முதல் மனைவி ரமலத்தையே விவாகரத்து செய்துவிட்டு வந்த பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா. மும்பையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், இவர்கள் காதலில் திடீர் விரிசல் ‌ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் திருமணத்தை ரத்து செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி விசாரித்த போது, முதல் மனைவியை பிரிந்தாலும் தனது குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளாராம் பிரபுதேவா. நயன்தாராவுடனான காதலுக்கு முன்னரும் சரி, இப்போதும் சரி குழந்தைகளுடன் அதிக நேரம் செலவளிப்பது, அவர்களுடன் ஷாப்பிங்க போவது என்று ரொம்ப ப்ரியமாக இருக்கிறார் பிரபுதேவா. சென்னை வரும்போதெல்லாம் குழந்தைகளை சந்திக்கிறாராம். ஆனால் இது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. குழந்தைகளை சந்திக்க நயன்தாரா தடை போட்டதாக தெரிகிறது. இருந்தும் நயன்தாராவுக்கு தெரியாமல் குழந்தைகளை சந்தித்து வருகிறார் பிரபுதேவா.

சமீபத்தில் கேரளா சென்ற பிரபுதேவா, நயன்தாராவிடம் வெளியூர் சூட்டிங்குக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு சென்னை வந்தாராம். இங்கு குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளார். இந்த விஷயம் நயன்தாரா காதுக்கு எட்ட ஆத்திரம் அடைந்த அவர், பிரபுதேவாவிடம் போனிலேயே சண்டை போட்டுவிட்டு, மும்பையில் இருந்து சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று விட்டார்.
 
இதனையடுத்து நயன்தாராவை சமாதானம் செய்ய பிரபுதேவாவும் கேரளாவில் உள்ள நயன்தாரா வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஆனால் பிரபுதேவாவை வீட்டிற்கு உள்ளேயே வரவிடாமல் கதவை அடைத்து வெளியே தள்ளியுள்ளார் நயன்தாரா. இருந்தும் 2 மணி நேரமாக பிரபுதேவா வெளியில் நின்று கொண்டிருந்தார். செல்போன் மூலம் நயன்தாராவுடன் பேச முயன்றார். நயன்தாரா தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். நயன்தாராவை சந்திக்காமலே பிரபுதேவா ஏமாற்றத்துடன் சென்னைக்கு திரும்பினார்.

நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடப்பது சகஜம்தான் என்றாலும், இந்த முறை அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, இரண்டு பேரின் காதலில் விரிசல் ஏற்பட வைத்துள்ளது. மேலும் திருமணம் வேலைகளும் ரத்தாகியுள்ளன. இதனால் இருவருக்கும் திருமணம் நடக்குமா? என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. நயன்தாராவை நம்பி, மனைவியை விவாகரத்து செய்தது மிகப்பெரிய தவறு என்று பிரபுதேவா தனது நெருங்கிய நண்பர்களிடம் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (168) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (168)

zz - india,இந்தியா
13 பிப், 2012 - 19:17 Report Abuse
 zz அறிவே இல்லையா உங்களுக்கு எல்லாம் போய் வேலைய பாருங்க
Rate this:
xxx - india,இந்தியா
31 ஜன, 2012 - 08:46 Report Abuse
 xxx நயன் இது உனக்கு ரொம்ப தேவைதான்மா. ஏன் என்றால் நீ முன்பே யோசிக்கணும் உனக்காக தன் மனைவியை விட்ட பிரபு இன்னொரு பொண்ணுக்காக உன்னை ஏன் விட மாட்டான்னு .....இப்போ இட்ஸ் டூ லேட். கடவுள் தந்த இந்த அழகு , திறமை வெச்சு எப்படி நல்லா இருக்கலாம் அதெல்லாம் விட்டிட்டு இப்படி கேவலமான ஒரு சிந்தை எதற்கு. டோன்ட் ஸ்பாயில் அன்ய்போடிஸ் லைப்.......
Rate this:
nithin - chennai,இந்தியா
09 நவ, 2011 - 17:23 Report Abuse
 nithin உங்களில் யார் அடுத்த பிரபு தேவா?
Rate this:
கரடி தலையன் - porambokku nagar,இந்தியா
18 அக், 2011 - 19:39 Report Abuse
 கரடி தலையன் போடா பன்னி.....
Rate this:
jeni - tirupur,இந்தியா
18 அக், 2011 - 12:34 Report Abuse
 jeni போங்க பாஸ் இவங்க எப்பவுமே இப்படி தான்
Rate this:
மேலும் 163 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in