குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் |
நடிகர் கமல்ஹாசனின் கனவுப்படம் ‛மருதநாயகம்'. 1997-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபத்தை சென்னை வரவழைத்து படப்பிடிப்பை துவக்கினார் கமல். மிகவும் பிரமாண்டமாக ஆரம்பமான இப்படம், வேகமாக வளர்ந்து வந்த நிலையில் பட்ஜெட் பிரச்னையால் முடங்கி போனது. அதன்பின்னர் கமல் எத்தனையோ படங்களில் நடித்துவிட்டார். ஆனால் ‛மருதநாயகம்' படத்தை அவரால் உயிர்பிக்க முடியவில்லை.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் மருதநாயகம் படத்தை, தற்போது கமல் மீண்டும் உயர்பிக்க முயற்சித்து வருகிறார். அதற்கேற்றபடி சாதமான சூழலும் உருவாகி வருகிறது. ஏற்கனவே மருதநாயகம் படத்தின் 40 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இன்னும் மீதமுள்ள 60 சதவீத பணியை மேற்கொள்ள இன்றைய சூழலில் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் தேவைப்படுகிறது. ஆனால் அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க தற்போதைய சூழலில் லைக்கா நிறுவனமே மட்டுமே உள்ளது.
தற்போது ரஜினியின் எந்திரன்-2 படத்தின் இரண்டாம் பாகமான ‛2.O' படத்தை தயாரித்து வரும் லைக்கா, அடுத்தப்படியாக கமலின் மருதநாயகம் படத்தை துவங்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த கமல், அங்கு லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அல்லிராஜாவை சந்தித்து பேசியதாகவும், அப்போது மருதநாயகம் படம் பற்றி பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் மூலம் கமலின் ‛மருதநாயகம்' படம் மீண்டும் உயிர்தெழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சபாஷ் நாயுடு படத்தில் பிஸியாக இருந்த கமல், வீட்டின் மாடிப்படியிலிருந்து தவறி கீழே விழுந்ததால் காலில் ஆபரேஷன் செய்து கொண்டு சில மாதங்களாக ஓய்வில் இருந்து வந்தார். விரைவில் சபாஷ் நாயுடு படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பையும் முடித்துவிட்டு மருதநாயகம் பணிகளில் அதிதீவிரமாக கமல் இறங்க உள்ளாராம்.