'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் ஆகி ய படங்களை இயக்கியவர் இராஜகுமாரன். இதில் திருமதி தமிழ் படத்தில் அவரே நாயகனாகவும் நடித்தார். அதன்பிறகு சந்தானம் நடித்த வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் படத்தில் காமெடியனாக நடித்த இராஜகுமாரன், தற்போது விஜய்மில்டன் இயக்கியுள்ள கடுகு படத்தில் புலிவேஷக்கலைஞனாக நடித்துள்ளார். ஜனவரி மாதம் திரைக்கு வருவதாக கூறப்படும் இந்த படத்தின் தனக்கு திருப்திகரமான வேடம் கிடைத்திருப்பதாக சொல்கிறார் அவர்.
மேலும் இராஜகுமாரன் கூறும்போது, கடுகு படத்தில் நான் நடித்துள்ள அந்த வேடம் உங்களுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்று விஜய் மில்டன் சொன்னதால் நடித்தேன். சொன்னது போலவே எனக்கு பொருத்தமான அதே சமயம், திருப்தியை கொடுத்த கதாபாத்திரம். ஏதோ நடித்தோம் என்பதில்லாமல் ஒரு நல்ல வேடத்தில் நடித்தோம் என்கிற மனநிறைவு கிடைத்திருக்கிறது. அதனால் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை போய்விட்டது. மாறாக, குறைவான படங்களில் நடித்தபோதும் இதுபோன்ற பெயர் சொல்லக் கூடிய வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்போது எனக்கு ஏற்பட்டுள்ளது என்கிறார் இராஜகுமாரன்.