தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
நிமிர்ந்து நில் படத்தை அடுத்து சமுத்திரகனி இயக்கி நடிக்கயிருந்த படம் கிட்னா. இந்த படத்தில் சாய் தன்ஷிகா நாயகியாக நடிக்கயிருந்தார். ஆனால் அந்த நேரம் பார்த்து அவருக்கு ரஜினியின் கபாலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், அந்த படத்தில் நடிக்க சென்று விட்டார். இதனால் கிட்னா படப்பிடிப்பை தள்ளி வைத்தார் சமுத்திரகனி. மேலும் கபாலி படத்திற்காக சாய் தன்ஷிகா தலைமுடியை கத்தரித்துக்கொண்டதால், அவர் அந்த படத்தில் நடித்து முடித்து வந்தபோது சமுத்திரகனியால் கிட்னா படத்தை தொடங்க முடியவில்லை. அதனால் தன்ஷிகாவிடம் தலைமுடி வளர்ந்த பிறகு படப்பிடிப்பை தொடங்கலாம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அப்பா படத்தை இயக்கி நடித்த சமுத்திரகனி, அதன்பிறகு கிட்னாவை தொடங்குவார். தனக்கு அழைப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்தார் சாய் தன்ஷிகா. ஆனால், தற்போது சமுத்திரகனி தொண்டன் என்ற படத்தை இயக்கி நடிக்க தயாராகி விட்டார். இதனால் கிட்னா படம் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. விளைவு, நான்கு மொழிகளில் மாறுபட்ட நாயகியாக நடிக்கயிருந்த படம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறதே என்று மனதளவில் பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் சாய் தன்ஷிகா.