தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிம்பு நடித்த 'வாலு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய் சந்தர். அந்தப்படம் வெளிவராமல் முடங்கிக்கிடந்த நேரத்தில் ஜெய்யை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அந்தப் படத்தில் நயன்தாரா உட்பட அரைடஜன் கதாநாயகிகளை நடிக்க வைக்கவும் திட்டமிட்டார். வாலு படம் முடங்கிப்போனதால், ஜெய்யை வைத்து இயக்கவிருந்த படமும் ட்ராப்பானது. பின்னர் வாலு படம் வெளியாகி தோல்வியடைந்தது. ஆனாலும் அவரது இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க சிம்பு சம்மதித்திருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு முன்பாக விக்ரமுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் விஜய் சந்தர்.
இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதோடு இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவல்களும் உலா வந்தன. ''விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார் என்பது மட்டுமே தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. வேறு யாரையும் நாங்கள் இன்னும் ஒப்பந்தம் செய்யவில்லை. மற்ற தகவல்களை விரைவில் வெளியிடுகிறோம்!'' என்று இந்தப்படத்தை தயாரிக்கும் எஸ்எஃப்எஃப் ஸ்கொயர் நிறுவனம் விளக்கமளித்தது.
இந்தப் படத்தில் சாய்பல்லவி ஏன் நடிக்கவிலல்லை? விக்ரம் வயதான ஹீரோ என்ற காரணத்தினால்தான் இந்தப் படத்தில் நடிக்க மறுத்தாராம் சாய்பல்லவி.