600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
ஆர்.வி.உதயகுமார் இயக்கிய கற்க கசடற படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் விக்ராந்த். இவர் நடிகர் விஜய்யின் சித்தி மகன் ஆவார். இந்த படத்தில்தான் ராய்லட்சுமியும் அறிமுகமானார். அதன்பிறகு பல படங்களில் நடித்தபோதும் எதிர்பார்த்த ஹிட் கிடைக்காததால் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்காக கெத்து உள்ளிட்ட சில படங்களில் வில்லனாகவும் நடித்தார் விக்ராந்த். இந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில், தற்போது அவர் ஒரே நேரத்தில் நான்கு முன்னணி டைரக்டர்களின் படங்களில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
அந்த வகையில், மாவீரன் கிட்டு படத்தை இயக்கி வந்தபோதே சுசீந்திரன் இயக்கி வந்த பெயரிடப்படாத இன்னொரு படத்தில் நாயகனாக நடித்து வந்தார் விக்ராந்த். அதோடு, விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள சுசீந்திரன் கதை வசனம் எழுதும் வெண்ணிலா கபடிக்குழு-2 படத்திலும் நாயகனாக நடிக்கிறார். மேலும், அப்பா படத்தை அடுத்து சமுத்திரகனி இயக்கி நடிக்கும் படம், பசங்க பாண்டிராஜ் இயக்கும் படம் என நான்கு படங்களில் நாயகனாக நடிக்கிறார் விக்ராந்த். இந்த படங்களைப்பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாக உள்ளது. ஆக, பல வருடங்களாக சரியான படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த விக்ராந்த், திடீரென்று பரபரப்பான ஹீரோவாகியிருக்கிறார்.