இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக நடிகை கவுதமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் விரிவாக எழுதியிருப்பதாவது....
‛‛ஒரு சாதாரண இந்திய குடிமகளாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். நான் ஒரு குடும்ப தலைவி, தாய் மற்றும் வேலைக்கு செல்லும் ஒரு பெண். சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தியவர்களில் நானும் ஒருவர். சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்லாது, பெண்கள் எப்படி தடைகள் தாண்டி முன்னேற வேண்டும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம். அவரால் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆனால் அவருக்கு ஏற்பட்ட மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, உடல்நலம் தேறி வருகிறார், நலமாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் சொல்லிய நிலையில் திடீரென அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே இந்த விஷயத்தில் பிரதமர் மோடி அவர்கள் தலையிட வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதால் மோடி அவர்கள் இந்த மர்மங்களை விலக்க முன் வர வேண்டும்.
ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவரின் மரணத்தை அறிந்து கொள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உண்டு. அதுவும் மக்களால் விரும்பப்பட்ட ஒரு முதல்வரின் மரணத்தை அறிவது எந்த தவறும் அல்ல. ஒரு சாதாரண குடிமகளாகத்தான் இந்த கடிதத்தை நான் அனுப்பியுள்ளேன். மோடி அவர்கள் இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டு உண்மையை வெளி கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன். எதையும் துணிச்சலாக செய்பவர்கள் நீங்கள், அதை பலமுறை நிரூபித்துள்ளீர்கள். இந்த விஷயத்திலும் நீங்கள் உண்மையை நிலைநாட்டுவீர்கள் என நம்புகிறேன்''.
இவ்வாறு கவுதமி கூறியுள்ளார்.