தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு சிறிய கவனகுறைவு பெரிய பிரச்சினையில் கொண்டு விடும் என்பதற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் நல்ல உதாரணமாகிவிட்டது.
ஒரு சங்கத்தை அரசிடம் பதிவு செய்தால் ஆண்டுக்கு ஒரு முறை அந்த சங்கத்தின் பதிவை புதுப்பிக்க வேண்டும். அதற்கு இ பார்ம் தாக்கல் செய்ய வேண்டும். அதாவது சங்கத்தின் ஒரு வருட செயல்பாடுகள், புதிய உறுப்பினர்கள் விபரம், போன்றவை தாக்கல் செய்ய வேண்டும். இது மிகச் சிறிய வேலை. இதனை 4 ஆண்டுகள் தாக்கல் செய்யவில்லை இயக்குனர் சங்கம். இதனால் சங்கத்தின் பெயரும், பதிவும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. பல வருடங்களுக்கு முன்பும் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்தும் பொறுப்பின்றி செயல்பட்டிருக்கிறார்கள் இயக்குனர் சங்க நிர்வாகிகள். உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி, மருத்துவ உதவி, கலை நிகழ்ச்சி, நிதி திரட்டுதல் என பிசியாக இருந்தவர்கள் அடிப்படையான விஷயத்தில் கோட்டைவிட்டுவிட்டார்கள். இதனை ஒரு தனிநபர் சரியாக பயன்படுத்திக் கொண்டு விட்டார்.
கார்த்திகேயன் என்ற உதவி இயக்குனரை சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் கோபம் அடைந்த அவர் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தபோது சங்க பதிவு ரத்தான விஷயம் அவருக்கு தெரிந்து விட்டது. பதிவாளர் அலுவலத்தில் பணிபுரியும் அவரது உறவுப் பெண் மூலமாக இந்த தகவல் அவருக்கு கிடைத்திருக்கிறது. உடனேயே தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் என்ற பெயரை கார்த்திகேயன் பதிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. இப்போது இயக்குனர் சங்கம் தவித்துக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை பழைய பெயர் கிடைக்காவிட்டால் அந்த பெயரில் உள்ள சொத்துக்களின் நிலை என்ன? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இது குறித்து ஆலோசிக்க அவரச கூட்டம் ஒன்றை கமலா தியேட்டரில் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் அமீர் பேசியதுதான் ஹைலைட். அதன் சுருக்கம் வருமாறு:
சங்கத்தின் பெயர் 4 ஆண்டுகளுக்கு முன்பே ரத்தாகிவிட்டது. இதனை சங்க மேலாளர் கவனித்திருக்க வேண்டும். நிர்வாகிகள் அதை அறிந்திருக்க வேண்டும். எப்படி கவனக்குறைவாக இருந்தார்கள் என்று தெரியவில்லை, இனி பழைய பெயர் கிடைப்பது சாத்தியமில்லை என்றே தெரிகிறது. புதிய பெயர் வைத்தால் சொத்துக்களை மீட்பது சிரமம்.
இயக்குனர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கமாக செயல்பட வேண்டும், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, பெப்சி தலைவர் சிவாவிடம் எதற்காக ஆலோசனை கேட்க வேண்டும். பெப்சி சிவா மீது ஒளிப்பதிவாளர் சங்கம் ஊழல் குற்றச்சாட்டு கூறியது. அதற்கு பெப்சி சிவா பதில் கூறட்டும். அவருக்கு ஆதரவாக இயக்குனர்கள் சங்கம் எதற்கு வேலை நிறுத்தம் வேண்டும். எம்.ஆர்.எம் குழும தலைவர் பச்சமுத்து நல்லவர் என்று பத்திரிகையாளரை கூட்டி எதற்கு நற்சான்றிதழ் தரவேண்டும். என்று பேசியிருக்கிறார்.
இதற்கு பதிலளித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது "100 சதவிகிதம் சங்கத்தின் பெயரையும் சொத்தையும் மீட்டு விடுவோம். யாரும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. நாங்கள் யாரும் ஊழல் செய்யவில்லை. சங்கத்தை விட்டு செல்லும்போது அவமரியாதையுடன் செல்ல மாட்டோம்" என்றார்.
தலைவர் விக்ரமன் பேசும்போது "விரையில் பொதுக்குழுவை கூட்டுவோம். சங்கத்தை மீட்டெடுப்போம். சொத்துக்கள் பறிபோக விடமாட்டோம்" என்றார்.