வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஆதித்யா சேனலில் ஒளிபரப்பான டாடி எனக்கொரு டவுட் நிகழ்ச்சி மூலம் பிர பலமானவர் டவுட் செந்தில். அதன்பிறகு தற்போது, மாமோவ் நீங்க எங்க இருக் கீங்க -என்ற நிகழ்ச்சியை இயக்கி நடித்து வருகிறார். இதில் அவருக்கு மனைவியாக அகல்யா சுப்ரமணியம் நடிக்கிறார். கணவன்-மனைவிக்கிடையே நடக்கும் சின்னச்சின்ன விசயங்களை நகைச்சுவையுடன் சொல்லி வருகிறார். இது பெருவாரியான நேயர்களை கவர்ந்து வருகிறது. அதோடு சுட்டீஸ்களுக்கான வாலு பசங்க என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வரும் அவர், இயக்குனர் ராதாமோகன் அருள்நிதியை நாயகனாக வைத்து இயக்கி வரும் பிருந்தாவனம் படத்தில் நகைச் சுவை-எமோசனல் கலந்த ஒரு வேடத்தில் நடித்து வருகிறார்.
அதுபற்றி டவுட் செந்தில் கூறுகையில்,
சின்னத்திரை-சினிமா இரண்டிலுமே இதுவரை நான் காமெடியனாக மட்டுமே என்னை வெளிப்படுத்தி வந்தேன். ஆனால், இப்போது பிருந்தாவனம் படத்தில் காமெடி மட்டுமின்றி எமோசனல் காட்சிகளிலும் நடித்து, நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். கதைப்படி இந்த படத்தில் நாயகன் அருள்நிதியுடன் நண்பனாக நடித்துள்ளேன். படம் முழுக்க அவருடன் பயணிக்கும் வேடம். அதேசமயம் எமோசனல் நடிப்பை வெளிப்படுத்தும் காட்சிகளையும் எனக்கு கொடுத்துள்ளார் டைரக்டர் ராதாமோகன். இதற்கு முன்பு அவர் இயக்கிய உப்புக்கருவாடு படத்தில் என்னை காமெடியனாக நடிக்க வைத்தபோதும், படநாயகி நந்திதாவின் காதலராகவும் காண்பித்தார். அது எனக்கு பெரிய ரீச்சாக அமைந்தது. இந்த படத்தில் இன்னொரு மாதிரியான வேடத்தை கொடுத்துள்ளார்.
முக்கியமாக, காமெடியன் சீரியசாக நடித்தாலும் ரசிகர்கள் சிரிப்பார்கள். ஆனால் இந்த படத்தில் நான் சீரியசாக நடிப்பதைப்பார்த்து கண்கலங்குவார்கள். அந்த அளவுக்கு என்னை வேறுபடுத்தி காண்பிக்கும் வகையிலான காட்சிகளை எனக்கு கொடுத்துள்ளார் டைரக்டர் ராதாமோகன். அதனால் கதையையும், காட்சிகளையும் உணர்ந்து நடித்துள்ளேன். கண்டிப்பாக இந்த பிருந்தாவனம் படம் என்னை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும். இந்த படத்திற்கு பிறகு என்னை வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வைக்க டைரக்டர்கள் முன்வருவார்கள் என உறுதியாக நம்புகிறேன் என்று டவுட் இல்லாமல் சொல்கிறார் டவுட் செந்தில்.