600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பெங்களூரைச் சேர்ந்த ப்ரணீதா அழகும், திறமையும் மிக்க நடிகை ஆனால் அவரால் தமிழில் எளிதாக ஜெயிக்க முடியவில்லை. உதயன் படத்தில் அருள்நிதி ஜோடியாக அறிமுகமானார். முதல் படமே தோல்வி என்பது பிரணீதாவுக்கு பின்னடைவாக இருந்தது. அடுத்து சகுணி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தார் அதுவும் தோல்வி படமாக அமைந்தது. அடுத்து மாஸ் படத்தல் சூர்யா ஜோடியாக நடித்தார். அதுவும் தோல்வி. இப்படி தமிழில் அவர் படங்கள் தோற்றாலும் தெலுங்கு, கன்னடத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.
தற்போது மீண்டும் தமிழுக்கு திரும்பி உள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் ஜெய் ஜோடியாகவும், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்தில் அதர்வா ஜோடியாகவும் நடித்து வருகிறார். இதுகுறித்து பிரணீதாக கூறியதாவது:
தமிழில் முன்னணிக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் நடித்த படங்கள் அனைத்தும் நல்ல படங்கள்தான். தெலுங்கு, கன்னடத்தில் பிசியாக இருந்ததால் தமிழில் அக்கறை செலுத்தாமல் இருந்ததுதான் என் தவறு. ஆண்டுக்கு இத்தனை படம் நடிக்க வேண்டும் என்று எந்த கணக்கும் வைத்துக் கொள்ளவில்லை. அதனால் நான் நிதானமாக இருக்கிறேன். தற்போது நடித்து வரும் தமிழ் படங்கள் எனக்கு ஒரு இடத்தை தரும் என்று நம்புகிறேன்.