ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் அஜித், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 57-வது படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் பல்கேரியாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், கட்சியினர் என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் நேற்று சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர்., சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்ததால் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த அஜித்தால் வர முடியவில்லை, இரங்கல் கடிதம் மட்டும் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஜெ.,க்கு அஞ்சலி : இந்நிலையில், பல்கேரியாவில் இருந்து அவசரமாக கிளம்பிய அஜித், இன்று அதிகாலை சென்னை விமானம் நிலையம் வந்தார். நேராக அவர் வீட்டுக்கு செல்லாமல், ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு தனது மனைவி ஷாலியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சோ-க்கு அஞ்சலி : தொடர்ந்து மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான சோ ராமசாமியின் மறைவு செய்தியை கேட்டதும் அவருக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்.