பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் உள்பட சில நடன மாஸ்டர்கள் முதலில் பாடல்களுக்கு நடனம் அமைத்து வந்தனர். பின்னர் ஒரு பாடலில் நடனமாடத் தொடங்கி பிரபலமான பிறகு ஹீரோவாகி விட்டனர். அதையடுத்து இப்போது இயக்குனர்களாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் இப்போது நடன மாஸ்டர் காயத்ரி ராகுராமும் இடம் பிடித்திருக்கிறார்.
பிரபல நடன மாஸ்டர் ராகுராமின் மகளான இந்த காயத்ரி, சில படங்களில் நடன மாஸ்டராக பணியாற்றி வந்தபோது, ஷக்தி சிதம்பரம் இயக்கிய சார்லி சாப்ளின் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர், சில படங்களில் பாடலுக்கும் நடனமாடி வந்தார். இந்த நிலையில், தற்போது அவர் யாதுமாகி நின்றாய் -என்றொரு படத்தை இயக்குகிறார். காதல் கதையில் உருவாகும் இந்த படத்தில், தனுஷையும் ஒரு ரொமான்டிக் பாடலை பாட வைத்துள்ளார் காயத்ரி ரகுராம்.