தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முள்ளமுட்டில் புரொடக்ஷன் சார்பில் ரோஹித் மேத்யூ தயாரித்துள்ள படம் பட்டினப்பாக்கம். நடிகை பாவனாவின் அண்ணன் ஜெயதேவ் இயக்கி உள்ளார். கலையரசன், அனஸ்வரா, சாயாசிங், யோக்ஜேப்பி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். ராணா ஒளிப்பதிவு செய்துள்ளார், இஷான் தேவ் இசை அமைத்துள்ளார்.
இந்தப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக்கு சென்றது. படத்தில் வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி தணிக்கை குழு யுஏ சான்றிதழ் கொடுத்தது. இதை எதிர்த்து படத்தயரிப்பாளர் ரிவைசிங் கமிட்டிக்குச் சென்றார். ரிவைசிங் கமிட்டி யு சான்றிதழுக்கு தகுதியான படம்தான் என்ற அறிவித்தது. அதை தொடர்ந்து தணிக்கை குழு யு சான்றிதழ் கொடுத்தது.
"குடும்ப கஷ்டத்தை போக்க ஹீரோ குறுக்கு வழியில் பணம் சமம்பாதிக்க நினைக்கிறார். அப்போது எதிர்பாராத ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் கதை. கடற்கரை பகுதி கதையின் களமாக இருப்பதால் அனைவருக்கும் தெரிந்த பட்டினபாக்கம் பெயரை படத்துக்கு வைத்தோம். படத்தில் நான்கு கதைகள் இருக்கிறது. அதில் ஒரு கதையில் வன்முறை அதிகமாக இருப்பதாக கூறித்தான் தணிக்கை குழு யுஏ கொடுத்தது. ஆனால் அந்த கதைக்கு அது தவிர்க்க முடியாதது என்று சொல்லி ரிவைசிங் கமிட்டியில் யு பெற்றோம்" என்கிறார் இயக்குனர் ஜெயதேவ்.