பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின்பாலி நாயகனாக நடித்த பிரேமம் படத்தில் அறிமுகமானவர் சாய் பல்லவி. அதையடுத்து மீண்டும் மலையாளத்தில் காளி என்ற படத்தில் நடித்த அவர், அடுத்தபடியாக தெலுங்கில் நயன்தாரா நடித்த அனாமிகா படத்தை இயக்கிய சேகர் கம்முலா இயக்கும் பிதா படத்தில் நடிக்கிறார். தமிழைப்பொறுத்தவரை மணிரத்னம் கார்த்தியை நாயக னாக வைத்து இயக்கி வரும் காற்று வெளியிடை படத்தில் நடிக்கயிருந்த சாய் பல்லவி, கடைசி நேரத்தில் அப்படத்தில் இருந்து விலகினார்.
இந்நிலையில், விக்ரம், சந்தானம் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்களில் நடிக்க சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் அவரோ, எனக்கு ஒரே படத்தில் ஏராளமான ரசிகர்கள் கிடைத்து விட்டார்கள். அதனால் நான் நடித்தால் படம் சூப்பர் ஹிட்டாக விடும் என்று சொல்லி ரூ. 50 லட்சம் சம்பளம் தர வேண்டும் என்கிறாராம். ஆனால் தமிழில் இன்னும் ஒரு படத்தில்கூட நடிக்காத நிலையில், அவர் கேட்ட இந்த சம்பளம் மிக அதிகமாக இருந்ததால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய தயாரிப்பாளர்கள் இப்போது வேறு நடிகைகள் பக்கம் திரும்பி விட்டனர்.