நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ஜீ தமிழ் சேனலில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் லட்சுமிராமகிருஷ்ணன், பிரச்சினையுடன் வரும் தம்பதிகளின் பிரச்சினை களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சிக்கு நேயர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இப்போது இன்னும் சில சேனல்களிலும் அதேபோன்ற நிகழ்ச்சிகளை வெவ்வேறு மாஜி நடிகைகளை வைத்து நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நீதிமன்றம் இருக்கும்போது எதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளை டி.வியில் நடத்த வேண்டும் என்று ஸ்ரீபிரியா, ராதிகா, ரஞ்சனி போன்ற மாஜி நடிகைகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஸ்ரீபிரியா, பணத்திற்காக சமூக சேவை செய்வது போன்று செயல்படுகிறார்கள் என்று லட்சுமி ராமகிருஷ்ணனை சாடியிருந்தார்.
அதையடுத்து, நான் மட்டுமல்ல எல்லோருமே பணத்திற்காகத்தான் வேலை செய்கிறோம். நான் பணத்திற்கு வேலை செய்தாலும் அதில் உண்மையான சமூக அக்கறை உள்ளது என்று ஸ்ரீபிரியாவுக்கு பதில் கொடுத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆக, பஞ்சாயத்து நிகழ்ச்சியினால் மாஜி நடிகைகளிடம் ஏற்பட்ட இந்த பிரச்சினையை தீர்க்கவே இன்னொரு பஞ்சாயத்து வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது.