'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
பாலாவின் அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஜனனி அய்யர். தமிழ்நாட்டு பெண்ணான இவர் அதன்பிறகு, பாகன், தெகிடி படங்களில் நடித்தவருக்கு பின்னர் படவாய்ப்புகள் இல்லை. அதனால் மலையாளத்தில் நடிக்க சென்று விட்டவர், மறுபடியும் தற்போது தமிழுக்கு வந்து தொலைக்காட்சி, அதேகண்கள், பலூன் என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், இந்த படங்களில் இரண்டு ஹீரோயினிகளில் ஒருவராக நடித்து வரும் ஜனனி அய்யர், தனக்கு மாறுபட்ட வேடம் என்பதால், இந்தமுறை தமிழ் ரசிகர்களின் மனதில் நான் அழுத்தமாக பதிந்து விடுவேன் என்கிறார்.
அதோடு, தெகிடி படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்த ஜனனி அய்யர், கிளாமர் விசயத்தில் ஆரம்பத்தில் இருந்தே கண்டிசனாகத்தான் இருந்து வருகிறார். ஆனபோதும், சமீபகாலமாக பெரும்பாலான நடிகைகள் பாடல் காட்சிகள் தூக்கலான கவர்ச்சியை வெளிப்படுத்தி வருவதால், இப்போது ஜனனியும் தேவையான கிளாமரை வெளிப்படுத்தி நடிக்க தயாராகி விட்டார். இதை தன்னிடம் புதிய படங்களுக்காக கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம் பட்டும்படாமலும் கூறி வந்தவர், இப்போது கதைக்கு தேவையான அளவு கிளாமராக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று ஓப்பனாக சொல்லி வருகிறார்.