சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்த போதே தமிழில பிசியாக வேண்டியவர் ரெஜினா. ஆனால் அந்த நேரத்தில் தன்னிடம் கதை சொன்ன டைரக்டர்களிடம் கவர்ச்சி விசயத்தில் அவர் கண்டி சனாக பேசியதால், அனைவருமே பின்வாங்கி விட்டனர். இதனால் தெலுங்கு சினிமாவில் கவனத்தை திருப்பிய ரெஜினா, அங்கு சில படங்களில் ஹோம்லியாக நடித்தார். ஆனால் பின்னர் அவரையும் அங்குள்ள டைரக்டர்கள் தோலுரித்து விட்டனர்.
இதனால் அங்கு இன்னும் நீடித்தால் தன்னை முழுநேர கிளாமர் ஹீரோயின் ஆக்கி விடுவார்கள் என்பதால் மறுபடியும் தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுரளிராஜனும், ராஜதந்திரம்-2 என பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் சில படங்களில் பல ஹீரோயினிகளில் ஒருவராகவும் நடிக்கிறார்.
மேலும், இப்படி ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்தபோதும் கால்சீட் விசயத்தில் ரொம்ப கவனமாக இருக்கிறாராம் ரெஜினா. அதற்கும் மேலாக, நேரம் தவறாமையை கடைபிடிக்கிறாராம். காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றல் 8.30க்கு ஸ்பாட்டுக்கு சென்று மேக்கப் போட்டு ரெடியாகி விடுகிறாராம். அதோடு, ஸ்பாட்டில் தேவையில்லாத வெட்டி அரட்டையும் அடிப்பதில்லையாம். இதனால் ரெஜினாவை தொழில் பக்தியுள்ள நடிகை என்று டைரக்டர்கள் புகழ்ந்து பேசுகிறார்கள்.