'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அகிலா, ஜூலி-2 இந்தி படங்களில் நடித்துள்ள ராய்லட்சுமி, தமிழில் மொட்ட சிவா கெட்ட சிவா, தெலுங்கில் கைதி நம்பர்-150 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மார்க்கெட் ஸ்டெடியாக இல்லாததால் சில படங்களில் ஒரு பாட்டுக்கும் நடனமாடுகிறார். மேலும், கிளாமர் கலந்த கேரக்டர்களிலேயே அதிகமாக நடித் துள்ள ராய்லட்சுமி, அடுத்தபடியாக ஆக்சன் ரோல்களில் நடிப்பதற்கும் டைரக்டர் களிடம் சான்ஸ் கேட்டு வருகிறார்.
இந்த நிலையில், சமீபகாலமாக சில முன்னணி நடிகைகள் டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருவது போன்று நேற்று ராய்லட்சுமியும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு அதிரடியான பதில்களை கொடுத்தவர், ஒரு ரசிகர், பிடித்தமான ஹீரோ யார்? என்று கேட்டதற்கு, துளியும் யோசிக்காமல் அஜித் என்று பதிலளித்துள்ளார். மங்காத்தா படத்தில் அவருடன் நடித்தபோதுதான் அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதை தெரிந்து கொண்டு என்றும் கூறியுள்ளார். ஆக,அனுஷ்கா, தமன்னா, காஜல்அகர்வால் வரிசையில் இப்போது ராய்லட்சுமியும் அஜித்தே தனக்கு பிடித்தமான ஹீரோ என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார்.