துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
சுசீந்திரன் இயக்கத்தில் சுமார் 380 தியேட்டர்களில் இன்று வெளியாகியுள்ள படம் 'மாவீரன் கிட்டு'. விஷ்ணு விஷால் ஹீரோவாகவும், ஸ்ரீதிவ்யா அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ள இந்தப்ப்படம் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இதுவரை அவர் இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக மாவீரன் கிட்டு படத்தைப் பற்றிய டாக் பரவியுள்ளது. அதாவது, தமிழகத்தில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார்!
இந்த படம் உருவாக ஒரு உண்மை சம்பவம்தான் காரணமாம். ''எங்களது 'மாவீரன் கிட்டு' படம் உருவாக காரணமான ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்சில் ஒரு ரசிகர் என்னிடம் உரிமையாக, 'சார், ஒரு தமிழனாய் நாங்க எல்லாம் பெருமைப்படுகிற மாதிரி ஒரு படம் பண்ணுங்க' என்றார். அன்று முதல் பல நேரங்களில் அவர் கூறிய அந்த வார்த்தை என்னை யோசிக்க வைத்தது. 'மாவீரன் கிட்டு' இந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான ஒரு திரைப்படமாக இருக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். நான் ஒரு தமிழனாய் இத்திரைப்படத்தை உருவாக்கியதற்கு பெருமை கொள்கிறேன். இத்திரைப்படம் உருவாக காரணமாக இருந்த அந்த ரசிகருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று சுசீந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குறிப்பிட்டுள்ளார்.
மாவீரன் கிட்டு படத்துக்கு கிடைக்கும் வரவேற்பு, வெற்றியை வைத்தே அடுத்தடுத்து நல்ல படங்களைக் கொடுப்பாராம் சுசீந்திரன்.