மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட்டில் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை கஜோல், திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்தவர், கடந்த சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். முதல் ரீ-என்ட்ரி படத்தை கஜோலின் கணவர் அஜய் தேவ்கனே தயாரிக்க உள்ளார். இந்நிலையில், பிரபுதேவா, அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான ‛மின்சார கனவு' படத்தின் மூலம் தமிழிலும் பிரபலமான நடிகை கஜோல், கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிக்க, செளந்தர்யா ரஜனி இயக்கத்தில் உருவாக உள்ள வேலையில்லா பட்டதாரி படத்தின் 2-ம் பாகத்தில் கஜோலை நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட கஜோலும் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம், இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன, ஒன்று அவரின் கதாபாத்திரம், மற்றொன்று அவருக்கு வழங்கப்பட இருக்கும் சம்பளமும் தான் என்கிறார்கள். விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.