ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றவரின், சட்டையைப் பிடித்து அடிக்கப் பாய்ந்ததன் மூலம், ஒரு ரவுடியைப் போல், நடிகை குஷ்பு நடந்து கொள்கிறார் என, பிரபல நடிகை ரஞ்சனி கண்டித்துள்ளார்.பிரபல நடிகை குஷ்பு, தனியார், டிவியில், குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். சமீபத்தில், ஒளிபரப்பான நிகழ்ச்சியின் போது, அதில் பங்கேற்றவர் மீது ஆத்திரம்அடைந்த குஷ்பு, அவரது சட்டையைப் பிடித்து அடிக்கப் பாய்ந்தார்; இது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குஷ்புவின் நடவடிக்கைக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், முதல் மரியாதை, கடலோர கவிதைகள் உள்ளிட்ட தமிழ் படங்கள் மற்றும் பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ள, முன்னாள் நடிகை ரஞ்சனி, சமூக வலைதளத்தில் குஷ்புவிற்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது: லட்சக் கணக்கான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில், இவ்வாறு ஒரு ரவுடி போல் குஷ்பு நடந்து கொள்வது, கண்டனத்துக்குரியது. குடும்ப பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குவதாகக் கூறி, இது போன்று நடப்பது, கேவலமான செயல். உண்மையில், குடும்ப பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு, குஷ்பு போன்றவர்களுக்கு என்ன தகுதி உள்ளது? தங்கள் குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண விரும்புவோர், இதற்கான ஆலோசனைகள் அளிக்கும் தன்னார்வ அமைப்புகளை நாடலாம். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.