தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமா தியேட்டர்களில் கட்டாயம் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்பு தியேட்டர்களில் படம் முடிந்ததும் திரையில் தேசியகொடி பறக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால் படம் முடிந்து எல்லோரும் சென்று விடுவதால் இந்த நடைமுறை வெற்றி பெறவில்லை. அதன் பிறகு படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இது சில மாநிலங்களில் மட்டும் நடைமுறையில் உள்ளது. பல மாநிலங்களில் இல்லை.
இதை எதிர்த்தும், எல்லா மாநிலங்களும் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் டில்லியைச் சேர்ந்த ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், மத்திய மாநில அரசுகள் விளக்க அளிக்கும் படி உத்தரவிட்டது. அதன்படி இருமாநில அரசுகளின் விளக்கமும் சமர்பிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டிற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து தியேட்டர்களிலும் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் மேலும் கூறியிருப்பதாவது... நாடு முழுவதும் தியேட்டர்களில், படம் திரையிடுவதற்கு முன்பாக தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும். திரையில் தேசிய கொடி தோன்ற வேண்டும். பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும். மத்திய அரசு உடனடியாக அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒருவார காலத்திற்குள் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். இதை வைத்து வர்த்தக ரீதியாக யாரும் எந்த விதமான பலன்களையும் உருவாக்க கூடாது. தேசிய கீதத்தின் போது தேவையில்லாத படங்கள் எதுவும் தோன்ற கூடாது என் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.