பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பத்திரிக்கையாளர் த.செ.ஞானவேல் இயக்கி உள்ள படம் கூட்டத்தில் ஒருவன். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த், நாசர், சமுத்திரகனி, பால சரவணன, ஜான் விஜய், ரமா, சஞ்சய் பாரதி, மாரிமுத்து நடித்துள்ளனர். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார், நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் கரு, நடிகர் கார்த்தியை பேட்டி கண்டபோது அவரிடமிருந்து கிடைத்தது என்கிறார் இயக்குனர் த.செ.ஞானவேல்.
அவர் மேலும் கூறியதாவது: நான் பத்திரிக்கையில் வேலை பார்க்கும் போது எனக்கு கிடைத்த அனுபவம் தான் இந்த படம். நான் கார்த்தியை பேட்டி காணும் போது "நான் என்னுடைய குடும்பத்தில் நடு பையனாக பிறந்தததால் என் மீது யாருக்கும் பெரிதாக கவனம் இருக்காது. முதல் பையன் அண்ணன் சூர்யா அம்மா செல்லம் , எங்கள் வீட்டின் கடைசி பிள்ளை என் தங்கை அவர் அப்பா செல்லம். இடையில் பிறந்த நான் எல்லோருக்கும் பொது என்று இருந்து வந்தேன்" என்று அவர் கூறியது தான் இந்த படம் உருவாவதற்கு முக்கிய புள்ளி. இந்த உலகத்தை மாற்றிய பலர் நடு பெஞ்ச் மாணவர்கள் தான். அப்படிப்பட்ட நல்ல கருத்தை கூறும் படம் தான் இது என்றார் இயக்குநர் ஞானவேல்.