'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
இன்றைய காலக்கட்டத்தில் விஜய் சேதுபதியின் எளிமை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். நாடக உலகிலும், சினிமாவிலும் பல சாதனைகளை படைத்த எஸ்.வி.சகஸ்ரநாமம் 250 படங்கள் நடித்திருந்தாலும் கடைசி வரை எளிமையாக வாழ்ந்தார். கம்யூனிச தலைவர்களுடன் நல்ல நட்புடன் இருந்தார்.
பொதுவாக கம்யூனிச தலைவர்கள் அதிகம் சினிமா பார்க்க மாட்டார்கள். ஆனால் சகஸ்ரநாமம் நாடகங்களையும், படங்களையும் விரும்பி பார்த்தனர். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதும் தனது சகஸ்ரநாமம் சேவா ஸ்டேஜ் என்ற கம்பெனி மூலம் தொடர்ந்து நாடகமும் நடத்தினார். 1935ல் வெளிவந்த மேனகா தான் முதல் படம். தூய தமிழில் நடிகர்கள் வசனம் பேசியபோது இவர்தான் முதன் முதலில் யதார்த்த தமிழில் பேசினார்.
பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே நடிக்க முடியும் என்றிருந்த காலகட்டத்தில் முதன் முறையாக நாடகத்தில் பின்னணி பாடலை கொண்டு வந்தது இவர்தான். பாடகி திரைக்கு பின்னால் இருந்து பாட கதாநாயகி வாயசைப்பார். பின்னர் அது சினிமாவுக்கும் வந்தது.
நாடகத்தில் நடித்துக் கொண்டே கார் மெக்கானிக்காகவும், பஸ் கண்டக்டராகவும் வேலை பார்த்தார். பேட்மிட்டன், வாலிபால் விளையாட்டு வீரராகவும் இருந்தார். பளு தூக்குதலிலும் சேம்பியனாக இருந்தார். கடைசி வரை தூய கதராடை அணிந்தார். சினிமாவிலும், நாடகத்திலும் பெற்ற அனைத்து தங்கம், வெள்ளி பதக்கங்களை யுத்த நிதிக்காக அள்ளிக் கொடுத்தார்.