'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு இன்று பிறந்த நாள்...நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ்ணன் என்கிற என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவில் ஆபீசர் கிளப்பில் சப்ளையர் சிறுவனாக இருந்து திரைப்படத்துறையில் கலைவாணராகி மகத்தான சாதனைகளை படைத்தார். அவர் பிறந்த கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்தது. அப்போது கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதியில் பெரும் புயல் வீசி அப்பாவி மக்களை வீடு வாசலை இழக்கச் செய்து நடுத் தெருவுக்கு கொண்டு வந்தது.
அப்போது என்.எஸ்.கிருஷ்ணன் தனது மனைவியுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நாடகம் நடத்தினார். அந்த நாடகததின் மூலம் கிடைத்த பணத்தை. திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சித்திரை திருநாள் மகராஜாவிடம் புயல் நிவாரண நிதியாக பெரும் தொகையை கொடுத்தார். அதனை கொண்டு புயல் நிவாரண பணிகளை மேற்கொண்ட மன்னர். பின்னர் ஒரு நாள் கலைவாணரையும், அவரது மனைவி¬யும் அழைத்து சமஸ்தான அரண்மணையில் விருந்து கொடுத்தார். விருந்துக்கு பின்னர் மன்னர் மற்றும் சமஸ்தானத்து அமைச்சர்கள், அதிகாரிகள் என்.எஸ்.கேவுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த போட்டோ நாகர்கோவிலில் உள்ள என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டில் உள்ளது.
(அருகில் உள்ள படத்தில் அமர்ந்திருப்பவர்களில் இடது ஓரத்தில் என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும் உள்ளனர்)