‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இருமுகன், காஷ்மோரா படங்களுக்குப்பிறகு டோரா, இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர்காலம் என பல படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இதில் டோரா படத்தில் அதிரடியான ஹாரர் படத்தில் நடித்திருப்பவர், மற்ற படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அறம் படத்தில் மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவின் கேரக்டர் அவர் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தும்விதமாக உருவாகியிருக்கிறது.
இந்த நிலையில், இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க, நயன்தாரா ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக மட்டுமே இதுவரை செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்போது விசாரித்தபோது, அந்த படத்தில் ஒரு 4 வயது குழந்தைக்கு அம்மாவாக நயன்தாரா நடிப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு யாரேனும் கணவராக நடிக்கிறார்களா? என்பது பற்றிய தகவல் சீக்ரெட்டாக இருந்தபோதும், இந்த படத்தின் மொத்த கதையும் நயன்தாராவை சுற்றியே பின்னப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் தனது அம்மா வேடத்துக்கு உயிர் கொடுக்கவேண்டும் என்பதற்காக அதிகமாக மேக்கப் போட்டுக்கொள்ளாமல் இயல்புத்தன்மையுடன் நடித்துள்ளாராம் நயன்தாரா.