'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனது மகன் பிரணவை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் வேலையை தனது ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான ஜீத்து ஜோசப்பிடம் கொடுத்துவிட்டார் மோகன்லால்.. அந்தப்படம் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்க இருக்கிறது.. இந்தநிலையில் அதற்கு முன்னதாக பிஜூமேனன் நடிக்கும் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளார் என்கிற தகவல் அவர் மூலமாகவே வெளியாகியுள்ளது. படத்திற்கு 'தஸ்கரன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.. அதற்கு காரணமும் உண்டு.. இந்துகோபன் என்பவர் எழுதிய 'தஸ்கரன் ; ஒரு மனியம்பிள்ளயுடே ஆத்மகதா' என்கிற புத்தகத்தை தழுவித்தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளாராம் ஜீத்து ஜோசப்..
இது பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய கொள்ளைக்காரனாக இருந்து, பின்னாளில் மக்களின் பாதுகாவலனாக மாறிய மனியம்பிள்ள என்கிற கொள்ளைக்காரனை பற்றிய கதை என்று சொல்லப்படுகிறது. தற்போது பிஜூமேனன் 'லட்சியம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்துவிட்டுத்தான் அடுத்ததாக 'தஸ்கரன்' படத்தில் நடிக்க இருக்கிறாராம்.. இந்த 'லட்சியம்' படத்தை புதியவரான அஸார் கான் என்பவர் இயக்கினாலும் படத்தின் கதையை எழுதியிருப்பவர் ஜீத்து ஜோசப் தான். அந்தவகையில் அடுத்தடுத்து ஜீத்து ஜோசப்பின் கதையில் நடிக்கும் பாக்கியசாலியாக மாறியுள்ளார் பிஜூ மேனன்.