ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பிரதமர் எடுத்துள்ள துணிச்சலான முடிவு குறித்து பல பிரபலங்களும் தங்களது கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.. அதேபோலத்தான் மோடியின் துணிச்சலான நடவடிக்கையை பாராட்டி தனது சொந்த வலைதளத்தில் கடிதம் எழுதினர் மோகன்லால்.. அது அவரது கருத்து.. ஆனால் மற்ற கட்சியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து வரிந்துகட்டிக்கொண்டு இந்த விஷயத்தில் மோகன்லாலின் கருத்தை விமர்சித்து வருவது அதிர்ச்சி தரும் விஷயமாகும்.. இன்னும் ஒரு சிலர் மோகன்லால் மூவாயிரம் கோடி ரூபாய் கருப்பு பணம் வைத்திருக்கிறார் என்றும் அதை மாற்றுவதற்கு மோடியின் தயவு தேவை என்பதால் அவருக்கு ஆதரவாக இப்படி கூறியுள்ளார் என்றும் கூட வாய்கூசாமல் பேசிவருகிறார்கள்..
தற்போது மோகன்லால், மேஜர் ரவி இயக்கத்தில் '1971 ; பியான்ட் தி பார்டர்ஸ்' என்கிற ராணுவ களத்தில் உருவாகும் படத்தில் நடித்துவருகிறார். காஷ்மீர் பகுதியில் நடைபெற்றுவரும் இந்தப்படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டில் இருந்த இயக்குனர் மேஜர் ரவியும் மோகன்லால் பிரதமரை பாராட்டி, அதனை தனது சொந்தக்குரலில் பதிவு செய்த ஆடியோவை கேட்டார்.. அதன்பின்னர் பல கட்சி பிரமுகர்களும் மோகன்லாலை வசைபாடுவதை, சோஷியல் மீடியாக்கள் மூலமாக அறிந்த மேஜர் ரவி மோகன்லால் பேசியதில் தவறென்ன இருக்கிறது என அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மேலும், மோகன்லால் பாராட்டியது நரேந்திர மோடி என்கிற தனி நபரைப்பற்றித்தானே தவிர, பா.ஜ.க என்கிற கட்சியை அல்ல.. அதை புரிந்துகொண்டு நாகரிகமாக பேச கற்றுக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார் மேஜர் ரவி.