ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகர்களில் யாருடைய வம்புதும்புக்கும் போகாதவர் யார் என்று யாரிடமாவது கேட்டால், அவர்கள் முதல் ஆளாக விரல் நீட்டுவது நடிகர் குஞ்சாக்கோ போபனாகத்தான் இருக்கும்.. அந்த அளவுக்கு சாத்வீகமான மனிதராக அறியப்படும் குஞ்சாக்கோ, சில தினங்களுக்கு முன் நடைபெற்ற திலீப்-காவ்யா மாதவன் திருமணம் குறித்து அவர்கள் இருவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.. ஆனால் மஞ்சு வாரியர் ஆதரவாளர்களோ, அதெப்படி மஞ்சு வாரியரின் நண்பராக இருந்துகொண்டு அவரை காயப்படுத்தும் விதமாக திலீப்புக்கும் காவ்யா மாதவனுக்கும் வாழ்த்து சொல்லலாம் என கொந்தளித்துள்ளார்கள்.
இவர்களுக்கு புரியும் விதமாக மிக நீண்ட பதிவு ஒன்றை எழுதியுள்ளார் குஞ்சாக்கோ.. “நான் மஞ்சுவுக்கு எந்த அளவுக்கு நண்பன் என்றும் அவரது கஷ்ட காலங்களில் எந்த அளவுக்கு அவருக்கு தோள் கொடுத்திருக்கிறேன் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும்.. அதனால் அது குறித்து உங்களுக்கு நான் விளக்கிக்கொண்டு இருக்கவேண்டிய தேவை இல்லைதான்.. ஆனால் நான் சொன்ன வாழ்த்தை தவறாக புரிந்துகொண்டீர்கள் என்பதற்காகத்தான் இந்த விளக்கம்..
திலீப் எனது அண்ணன் போன்றவர்.. எனது நல்லது கெட்டதுகளில் உடன் நிற்பவர்.. காவ்யா மாதவன் எனக்கு நல்ல தோழி.. சொல்லப்போனால் தங்கை என்றே கூட சொல்லலாம்.. அப்படிப்பட்டவர்கள் திருமண வாழ்வில் இணையும்போது நான் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ளவோ, அவர்கள் முடிவு குறித்து கோபப்படவோ எனக்கு என்ன உரிமை இருக்கிறது.. மூவருக்கும் நண்பராக இருக்கிறேனே தவிர அவர்களது பெர்ஷனல் விஷயங்களில் நான் தலையிட்டதே இல்லை. என் வாழ்த்து அவர்களுக்கான மனப்பூர்வமான ஒன்றே தவிர மஞ்சுவை காயப்படுத்தும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை” என குறிப்பிட்டுள்ளார் குஞ்சாக்கோ போபன்.